தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது அப்பா ராஜ்குமார் சமாதி அருகே தகனம் செய்யப்பட உள்ளது.
புனித் ராஜ்குமார் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மைதானத்தில் உடல் வைக்கப்பட்டது. ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையில் புனித் மறைவு கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இத்துடன் புனித்தின் மரண செய்தியறிந்து மாரடைப்பில் இருவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இறந்த ஒரு ரசிகரின் பெயர் பரசுராம் தேவம்மன்வார் என கூறப்படுகிறது.
Karnataka CM Bommai pays tribute to actor Puneeth Rajkumar