தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காரைக்காலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் 10 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை: துறைமுகத்தை இழுத்து மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு:*
காரைக்கால் ஜீலை 31…
காரைக்கால் மாவட்டத்தில் 5101 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 172 நபர்களுக்கு வைரஸ் தொற்று (பாசிட்டிவ்) ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 132 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 40 நபர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் மீன் வாங்க வந்த வெளிமாவட்ட வியாபாரிகளிடமிருந்து, மீனவர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, மண்டபத்தூர், காளிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளதால், இன்று முதல் 10 நாட்களுக்கு காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை இழுத்து மூட அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்