கமல் கட்சியில் இருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..; மநீம அறிக்கை

கமல் கட்சியில் இருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..; மநீம அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kameela nassar (1)நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல (கட்டமைப்பு) மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் கமீலா நாசர்.

இவர் நடிகர் நாசரின் மனைவி.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இவர் இந்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு (ஏப்ரல் 6) முன்பே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தேர்தல் நேரத்திலும் கூட எதிலும் பங்கேற்காமல் கமீலா நாசர் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளரான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த கமீலா நாசர் நேற்று முதல் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கமீலா நாசர் கருதியதாக சொல்லப்படுகிறது. IMG-20210421-WA0024

Kameela Nassar quits Makkal Needhi Maiam

கொரோனா தடுப்பூசி விலை உயர்வு..: அரசுகளுக்கு 400 ரூபாய் தனியாருக்கு 600 ரூபாய் என நிர்ணயம்

கொரோனா தடுப்பூசி விலை உயர்வு..: அரசுகளுக்கு 400 ரூபாய் தனியாருக்கு 600 ரூபாய் என நிர்ணயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccine india (1)கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் முதற்கட்டபணியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் முக்கிய பங்கில் உள்ளன.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் எண்ணிக்கையை வரும் ஜூலை மாதத்திலிருந்து 2 மில்லியனாக அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மாதத்திற்கு 5 மில்லியன் தடுப்பூசிகளை நிறுவனம் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது..

இந்த எண்ணிக்கை உயர்வுக்காக இந்நிறுவனம் ரூ.150 கோடியை நிதியாக கோரியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலில் 250 ரூபாயாக இருந்த தடுப்பூசியின் விலை தற்போது மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மே-1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தான் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Corona vaccines rate increased in india

தடுப்பூசி திருவிழா.. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஃபேன்ஸி பெயர் சூட்டும் நேரமல்ல..; ஆட்சியாளர்களை கண்டிக்கும் கமல்

தடுப்பூசி திருவிழா.. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஃபேன்ஸி பெயர் சூட்டும் நேரமல்ல..; ஆட்சியாளர்களை கண்டிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan (9)கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.

பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

குறைந்த பட்சம் இரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டபின் போனில் அழைத்து கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை.

முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள்.

தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.

உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகுவதும் ஏற்புடையதல்ல.

தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கிக்கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்வீட்டுகிறார். மாநிலங்கள் கொரானா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார்? இன்னொரு அமைச்சர்.

முன்நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரச்சாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் ‘ஊசி போடும் திருவிழா’, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச் சூட்டிக்கொண்டிருக்கிறார்.

மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது.

ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன்னகர வேண்டும்.

மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும்.

ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்!

– கமல்ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan asked government not to show negligence in corona

JUST IN சனி & ஞாயிறு முழு ஊரடங்கு.. மற்ற நாட்களில் அரை நாள் ஊரடங்கு.; புதுச்சேரியில் ஆளுநர் அதிரடி

JUST IN சனி & ஞாயிறு முழு ஊரடங்கு.. மற்ற நாட்களில் அரை நாள் ஊரடங்கு.; புதுச்சேரியில் ஆளுநர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 2வது அலை வைரஸை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் ஊரடங்கு கட்டுபாடுகளை விதித்துள்ளார்.

ஆளுநரின் உத்தரவில்…

புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு.

மற்ற நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் அனுமதி.

* தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்தல்.

* ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்துவது அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகளை கூடுதலாக கொள்முதல் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்துவது.

* மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காக தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்தல். மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்துவது மருத்துவப் பணியாளர்கள் , பிற அதிகாரிகளுக்கு எளிதான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது.

* மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது.

கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகளை ஊக்கப்படுத்துவது ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

கொரோனா அழைத்துச் செல்ல தனியான ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்துவது.

*அறிகுறிகள் காணப்படும் நபர்களை மருத்துவப் பணியாளர்களின் பரிசோதனையைத் தொடர்ந்து மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் .

அதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவு மற்றும் பிற தேவைகள் மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டும்.

*புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவது மற்ற நாட்களில் கடைகள் அங்காடிகள் பகல் 2 மணி மட்டுமே இயங்கும் அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் .

பகல் 2 மணிக்குப் பிறகு , உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .

*வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது.. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும்.

பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்

இவ்வாறு ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

Puducherry Lieutenant Governor Tamilisai announced complete lockdown on Sat and Sunday

சன்டே லாக்டவுன்.. நைட் ஷோ கேன்சல்.. தியேட்டர்கள் நிலை குறித்த ஆலோசனை முடிவு இதோ..

சன்டே லாக்டவுன்.. நைட் ஷோ கேன்சல்.. தியேட்டர்கள் நிலை குறித்த ஆலோசனை முடிவு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tirupur subramaniamகொரோனா 2வது அலை காரணமாக இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை கட்டாய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் இரவுக்காட்சி திரையிட முடியாது.

ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 20 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந்த நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன்படி …அரசு அறிவுறுத்தலின்படி தொடர்ந்து திரையரங்குகள் இயக்க முடிவு.

தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் இயங்கும் எனவும் புதிய அரசு (மே 2 வாக்கு எண்ணிக்கை நாள்) உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட அவரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Theatre owners desicion on night show cancel

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..; குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rahul gandhi mk stalin (2)காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

ராகுல் காந்திக்கு தற்போது வயது 50் ஆகிறது.

இதுபற்றி அவரின் டுவிட்டரில்…

“கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன்.

அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MK Stalin wishes Rahul Gandhi a speedy recovery

More Articles
Follows