அமிதாப்-அமீர்கான் இணையும் பட டிரைலரை வெளியிட்டார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன் அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .

இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் முதன் முதலாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கியுள்ளார்.

நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை பற்றிய தகவலை வெளியிட அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை. பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. மேலும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.

Kamalhassan released Thugs of Hindostan trailer Tamil version

மழை கால நோய்களை தடுக்க ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜின் டிப்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் மாதம் முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னும் தமிழகத்தில் சில இடங்களில் கோடை கொடுமை உள்ளது.

விரைவில் மழை காலம் தொடங்கவுள்ளது.

வருகிற நவம்பர் மாதத்தில் வரும் மழையால் வைரஸ் நோய்,சளி,இருமல் போன்றவைகள் வரலாம். அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா கூறியுள்ளதாவது…

மழை காலம் குறித்து பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

நம் உடம்பை பாதுகாப்பதற்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வைட்டமின்களை எடுப்பது அவசியம். எனவே உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்து, அவர்களின் ஆலோசனை படி zincovit,vitamin b,vitamin c, மருந்துகளை எடுக்க வேண்டும்.

மருந்துகளை வாங்குவதற்கு முன்பே அந்த மருந்து காலாவதி ஆனதா? நாம் உட்கொள்ளலாமா? உள்ளிட்டவைகளை சரிபார்த்து வாங்க வேண்டும்.” என கூறியுள்ளார் திவ்யா.

Nutritionist Divya Sathyaraj alerts public about Flu and Virus during rainy season

என்னை விட சின்ன பெண் த்ரிஷாவை பார்த்தால் பயம்.. : விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்திருக்கும் 96 படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இப்படத்தில் ராம் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க, ஜானு கேரக்டரில் த்ரிஷா நடித்துளார்.முக்கிய கேரக்டரில் ஜனகராஜ் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது விஜய்சேதுபதி பேசியதாவது:

’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.

ஆனால், 96 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் அதையும் தாண்டி ஒரு பயம் ஏற்பட்டுள்ளது.

எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் எல்லாரும் ரசித்து ரசித்து வேலை செய்தோம்.
சினிமாவில் எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. நன்றாக இருக்கோம். ஆனால், அனைவருமே நல்ல சம்பளம் வாங்குவதில்லை.

அதையும் தாண்டி, நாம் பார்க்கும் நல்ல வேலையில் ஒரு மனநிம்மதி இருக்கிறது பாருங்கள். அது ஒரு சில படத்தில் தான் கிடைக்கும். இப்படத்தில் அனைவருக்குமே அந்த மனநிம்மதி கிடைத்தது.

எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித் தான் அம்மா பயமுறுத்துவார்.

நாயகிகள் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் கண்டிப்பாக என்னைவிட சுமார் 6/7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா.” என்றார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi shares his working experience with Trisha

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை மிகப்பெரிய அளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்கெட்டிங் செய்து வெளியிட்டது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2 மற்றும் 3 பாகங்களும் தற்போது வெளியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் ஹரி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை நேரிடையாக தயாரிக்க முன் வந்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

தற்போது தயாரித்து வரும் பேட்ட, சர்கார், தலைவர் ரஜினி 166 ஆகிய படங்களை சூர்யா படத்தை சன் டிவி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.

Suriya and Hari teams up with Sun pictures

பேட்ட-சர்காரை முடித்துவிட்டு ரஜினி-முருகதாஸை இணைக்கும் சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட-சர்காரை முடித்துவிட்டு ரஜினி-சூர்யாவுடன் இணையும் சன் டிவி

ஒரே நேரத்தில் ரஜினியின் பேட்ட மற்றும் விஜய்யின் சர்கார் ஆகிய இரண்டு மெகா படங்களை சன் டிவி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சர்கார் படம் 2018 தீபாவளிக்கும், பேட்ட படம் 2019 பொங்கலுக்கும் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘பேட்ட’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தை தொடங்க சன் டிவி திட்டமிட்டுள்ளதாம்.

அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ரஜினி நடிப்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

After Petta and Sarkar movies Sun Tv produce Rajini Murugadoss film

கமல்-விக்ரம் இணையும் படம் டோன்ட் ப்ரீத் படத்தின் ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமி 2 படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதில் முக்கிய வேடத்தில் கமலின் 2வது மகள் அக்சராஹாசன் நடிக்கிறார்.

இப்படத்தை தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் பிரபல ஹாலிவுட் படமான டோன்ட் ப்ரீத் படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்படுகிறது.

பெடி அல்வரேஸ் இயக்கிய இதில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் ஆகியோர் நடித்திருந்தனர்,

பார்வையற்ற ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார்.

அந்த வீட்டிற்கு கொள்ளையர்கள் வருகின்றனர். அவர்களை எதிர்கொண்டு ஒவ்வொருவராக கொலை செய்வார் ஸ்டீபன் லாங்.

அந்த கேரக்டரில்தான் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே காசி படத்தில் அசல் பார்வையற்றவராக நடித்து அசத்தியவர் விக்ரம். ஒரு வேளை இந்த ஹாலிவுட் கதை உறுதியாகும் பட்சத்தில் இதிலும் அசத்துவார் விக்ரம் என நம்பலாம்.

More Articles
Follows