தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு உத்தரவு சரியாக திட்டமிடப்படவில்லை என மோடியை கண்டித்து அடிக்கடி கருத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
மேலும் பால்கனி அரசு அடித்தட்டு மக்கள் நலனை கண்டுக் கொள்ளவில்லை எனவும் சாடி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் என்று இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதித்துவிட்டு இந்திய கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்கள் மீன் பிடிக்க அனுமதித்தது ஏன் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில்…
“ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி?” என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்.
Kamalhassan question about Fishing ant its ban period