தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கோலி சோடா’ கிஷோர் ஹீரோவாக நடிக்கும் ‘உறுதிகொள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு காதல் புகழ் விருச்சிககாந்துக்கு பட வாய்ப்பை வழங்கினார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
அவ்விழாவில் மன்சூர்அலிகான் பேசியதாவது…
நம்ம கவர்மெண்ட்டின் 100 நாள் வேலை திட்டம் போல் கஷ்டப்படுகிற சினிமாகாரங்களுக்கு ஒரு டி.வி சேனல் ஏதோ படி அளக்கிறாங்க.
ஆனால் கமல் மாதிரி ஒரு உலகப்புகழ் பெற்ற நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவை அழிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியால் ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ காட்சிக்கு மக்கள் வருவதில்லை.
பகல் நேரத்திலும் இந்த நிகழ்ச்சி டிவியில் வருவதால், அப்போதும் தியேட்டரில் கூட்டமில்லை.
வெளியிலிருந்து யாரும் வந்து சினிமாவை அழிக்க வேண்டாம். சினிமாக்காரங்களே போதும்.
நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ அல்லது வேறு ஒரு பெரிய நடிகர் நிகழ்ச்சி நடத்தினால், கமல் பட வசூல் என்னவாகும்? அவர் அதை யோசிக்க வேண்டாமா? என்று மன்சூர் அலிகான் பேசினார்.
Kamalhassan is reason for Film industry loss says Mansoor Alikhan