தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகன் கமல், அண்மைகாலமாக தமிழகத்தின் தலைப்பு செய்தி நாயகனாகவே மாறிவிட்டார்.
இவர் தமிழக அரசை தாக்கி பேசியதில் இருந்து, ஒவ்வொரு அமைச்சர்களாக கமலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுபற்றிய பல விவாதங்களை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது…
‘திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று நடிகர் அஜித் மேடையில் தைரியமாக குறிப்பிட்டார்.
அப்போது கமல் எங்கு சென்றார்? அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்? என்றார்.
மேலும் தன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு கமல் ஏதேனும் ஆதாரம் கொடுத்தால் அந்த குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Kamalhassan doestnot have courage like Ajith Says TN Minister