தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம்.
இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்… ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து கமல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது…
‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!
‘வேற்று மாநில முதல்வர், தமிழக நடிகரை பாராட்டுவது எவ்வளவு அழகு’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.
இதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
திரு.பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.
நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள் – கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்’’ என்று எழுதியுள்ளார்.
தற்போது கமலின் இக்கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.