தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது தங்களை கோரிக்கைகளை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முன்வைத்தனர்.
அதன்பின்னர் விஷால் பேசியதாவது…
“திருட்டு விசிடி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை திரையுலகம் சந்தித்து வருகிறது.
அதில் ISP (Internet Service Provider) தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு இருந்தால் வெகுவிரைவில் திருட்டு விசிடியை தடுக்க முடியும்.
மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வரும் நிலையில், தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட வேண்டும்.
கமல்ஹாசனுக்கு ப்ரெஞ்ச் அரசு செவாலியே விருது கொடுத்து கவுரவித்துள்ளது.
அதற்கு இந்திய திரையுலகம் சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்” என்று பேசினார் விஷால்.
Kamal Vishal Karthi met Central Minister Venkaiah Naidu regarding Cine Industry issues