தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே உலகப் புகழ்பெற்ற ஆஸ்கரின் நுழைவு வாயில் வரை சென்றுள்ளன.
அதில் கமல்ஹாசனின் ‘நாயகன்’ மற்றும் ‘குருதிப்புனல்’ படங்கள் முக்கியமானவை.
இதில் நாயகன் 1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியும், ‘குருதிப்புனல்’ படம் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியும் (இன்று அக். 23) வெளியானது.
தற்போது இப்படங்களை நினைவுகூர்ந்து ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
நாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
இத்தகைய ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.