தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் 180 கி.மீ. வேகத்தில் தாக்கியது.
இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பிகள், வீட்டின் கூறைகள் அனைத்தும் பலத்த சேதமடைந்துவிட்டது.
பெரும்பாலான பிரபலங்கள் நிவாரண நிதிகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் நேரிடையாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை கமல் சந்தித்தார்.
அப்போது அவரிடம், “கடந்த காலங்களில் இயற்கை பேரிடர் வரும்போது அரசின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
கஜா பேரிடரின் போது முக்கியமான பிரபலங்களான விஜய், ரஜினி ஆகியோர் தங்களது ரசிகர்கள் மூலம் நிவாரணத்தை மக்களிடம் எடுத்து செல்கிறார்கள். இந்த மாற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ரொம்ப வருத்தத்திற்குரிய, சந்தேகம் வலுத்துவிட்ட நிலையை காட்டுகிறது. கொடுத்த பணம் மக்களிடம் போய் சேராது என்ற அவநம்பிக்கை அரசின் மீது வந்துவிட்டது” என தெரிவித்தார்.
Kamal talks about Rajini and Vijays contribution towards Gaja Cyclone Relief