தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து அப்துல் கலாம் பயின்ற பள்ளியின் வாசலுக்கு சென்று பார்த்தார்.
பின்னர் ராமநாதபுரம் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசினார்.
தற்போது ராமநாதபுரம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார்.
அங்கு பேசும்போது…
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளேன். மதுரைக்கு சென்று பேசலாம் என நினைத்தேன்.
ஆனால் உங்கள் அன்பை பார்க்கும்போது இங்கேயே பேச தோன்றுகிறது.
இதுவரை நீங்கள் என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள்.
என்னை பற்றி நான் என்ன நினைகிறேன் என்பதை நான் உங்களிடம் சொல்கிறேன்.
இனி நான் சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு.
அதை பத்திரமாக ஏற்றி வைத்து, பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
அதை நீங்கள் செய்வீர்கள் என் நம்புகிறேன்” என் பேசினார்.
இதனையடுத்து இன்று மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தன் கட்சி பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.
Kamal speech at Public meeting regarding his political entry