Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal speech at Public meeting regarding his political entryகமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து அப்துல் கலாம் பயின்ற பள்ளியின் வாசலுக்கு சென்று பார்த்தார்.

பின்னர் ராமநாதபுரம் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசினார்.

தற்போது ராமநாதபுரம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார்.

அங்கு பேசும்போது…

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளேன். மதுரைக்கு சென்று பேசலாம் என நினைத்தேன்.

ஆனால் உங்கள் அன்பை பார்க்கும்போது இங்கேயே பேச தோன்றுகிறது.

இதுவரை நீங்கள் என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள்.

என்னை பற்றி நான் என்ன நினைகிறேன் என்பதை நான் உங்களிடம் சொல்கிறேன்.

இனி நான் சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு.

அதை பத்திரமாக ஏற்றி வைத்து, பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
அதை நீங்கள் செய்வீர்கள் என் நம்புகிறேன்” என் பேசினார்.

இதனையடுத்து இன்று மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தன் கட்சி பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

Kamal speech at Public meeting regarding his political entry

அப்துல்கலாம் பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது… : கமல்

அப்துல்கலாம் பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hindu Munnani against Kamal visiting Abdul Kalams schoolஉலகநாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் கமல்ஹாசன், இன்றுமுதல் அரசியல் களத்தில் நேரிடையாக இறங்கியுள்ளார்.

இதனையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

இல்லம் சென்ற பின் காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட முடிவு செய்திருந்தார்.

ஆனால் அரசியல் நோக்கத்தோடு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட கூடாது என கூறி இந்து முன்னணி அளித்த புகாரை அடுத்த பள்ளிக்கல்வித்துறை இதற்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டத்தை கமல் ரத்து செய்துள்ளார்.
இருந்தபோதிலும் அந்த பள்ளியின் வாசல் வரை சென்று பார்த்தார் கமல்.

இதுகுறித்து கமல் கூறும்போது அப்துல் கலாம் பள்ளிக்கு செல்ல நினைத்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை.

பள்ளிக்கு செல்லாமல் அவர்கள் தடுக்கலாம். ஆனால் என் படிப்பை தடுக்கமுடியாது.

பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது” என தெரிவித்தார் கமல்.

Hindu Munnani against Kamal visiting Abdul Kalams school

கலாம் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்

கலாம் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal started his political tour from APJ Abdul Kalam home at Rameswaramதமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்.

அப்போது, கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார்.

வீட்டின் உள்ளே, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

கலாமின் சகோதரருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல்.

மேலும் தன் காலை உணவை அந்த இல்லத்திலேயே சாப்பிட்டார்.

பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில்…

பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

Kamal started his political tour from APJ Abdul Kalam home at Rameswaram

Kamal haasan at abdul kalam house (4)

நான் பூ அல்ல; விதை… மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

நான் பூ அல்ல; விதை… மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and stalinகமல் மற்றும் ரஜினியின் அரசியல் வருகையை மறைமுக தாக்கி பேசியிருந்தார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.

அப்போது அவர்கள் காகித பூக்கள். அது மணக்காது என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் இன்று பேசியுள்ளார்.

“நான் பூ அல்ல; விதை. என்னை நுகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள் வளருவேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நாளை கமல் தன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

காகித பூக்கள் மணக்காது… ரஜினி-கமல் அரசியல் பற்றி ஸ்டாலின் தாக்கு

காகித பூக்கள் மணக்காது… ரஜினி-கமல் அரசியல் பற்றி ஸ்டாலின் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and stalinசினிமாவில் உலகில் இருந்து அரசியல் பயணத்திற்கு கமல் மற்றும் ரஜினி இருவரும் தயாராகிவிட்டனர்.

நாளை கமல் தன் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார். முதற்கட்டமாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார்.

நாளை இவரது அரசியல் பயணம் தொடங்கவுள்ள நிலையில் கருணாநிதி, ரஜினி, விஜயகாந்த், சீமான் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் நட்பு ரீதியாக பேசினார்.

இந்நிலையில் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.

திமுக என்பது அரசமரம் போன்றது. அதை யாராலும் அசைக்க முடியாது.

அரசியலுக்கு தற்போது வருபவர்கள் காகிதப் பூக்கள் போன்றவர்கள். அது மணக்காது என்று மறைமுக தாக்கி பேசினார்.

நாச்சியார் படத்தில் அண்ணி ஜோதிகா கேரக்டர் செம… கார்த்தி பாராட்டு

நாச்சியார் படத்தில் அண்ணி ஜோதிகா கேரக்டர் செம… கார்த்தி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and jyothikaபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘நாச்சியார்’ படம்
நல்ல விமர்சனங்களை பெற்று
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு பல பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

‘நாச்சியார்’ படத்தை பார்த்து நடிகர் சிவகுமார் அண்மையில் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் இப்போது நடிகர் கார்த்தியும் ‘நாச்சியார்’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘நாச்சியார்’ ரொம்பவும் ‘நீட்’டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் .

பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட
இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows