தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர் பேசியதாவது…
“என்னைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதைப் பார்க்கும் போது நியாயமாக பதட்டம்தான் வரும். பெரும் கோபத்தில் வந்தவர்களுக்கு பதட்டம் தெரியாது. போருக்குச் செல்பவர்களுக்கு பதட்டம் போய்விடும், பயமும் போய்விடும்.
இனி, கடமையைச் செய்யும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்யும் ஒரு குடும்பமாக இருக்கப் போகிறோம்.
நான் தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து “லோக் ஆயுக்தாவாகதான்” இருக்கும்.
படிப்பு மிக மிக முக்கியம். அதை செய்து விட்டு நீங்கள் வெளியே வந்ததும், உங்களை தாக்கப் போவது அரசியலும், ஊழலும்தான். அதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும்.
நீங்கள் அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அரசியல் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக இருந்தீர்கள் என்றால் வரும் அரசியல்வாதி, நியாயமான அரசியல்வாதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாதவனாக ஆகிவிடுவான். அதை நான் எதிர்பார்க்கிறேன்.
என்னை பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் பல தடைகள் இருக்கின்றன. அங்கே போய் பேசி புரிய வைத்துவிடுவேனோ என்ற பதட்டம் பலருக்கு இருக்கிறது.
நான் கல்லூரிக்குப் போவதை தடை செய்யலாம், நான் கற்பதைத் தடை செய்ய முடியாது.
ஏதாவது, நல்லது செய்யுங்கள் என்று நம்பி கைகொடுக்கும், ஒரு தோழரிடம், தொண்டனிடம் நான் பாடம் கற்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு பாடமாகிறது.
என்னுடைய மேடைகளில் பொன்னாடைகளைத் தவிர்க்கிறோம், பூமாலைகளைத் தவிர்க்கிறோம், காலில் விழுதைத் தவிர்க்கிறோம். இவையெல்லாம் மக்கள் நீதி மய்யம் மேடைகளில் நிகழாது, நிகழ்ந்தால் தடுக்கப்படும்.
மாணவர்களைப் பார்த்து நான் பேச வேண்டும், எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்ல வேண்டும், அவர்களிடமிருந்து நான் கற்க வேண்டும் என்ற சாதாரண தமிழனின் ஆசையைத் தடை போடும் சிலர் எனக்கு வேடிக்கை மனிதர்களாகவே தெரிகிறார்கள்.
அந்த வேடிக்கையை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கட்டும். நாம் வேலையைச் செய்வோம்.
பின்னர் ஒரு மாணவி எழுப்பிய நீட் தேவையா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “உங்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. அது, யாருக்குமே இல்லை என்பது தான் சரியான பதில்.
காரணம் நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தாம். நாம் என்பது தமிழகத்தை சொல்கிறேன்.
தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது” என கமல்ஹாசன் பேசினார்.
Kamal speech at Ponneri Pvt College about politics and society