தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா என்ற கொடிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் உலகமெங்கும் லட்சணக்கனக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணனக்கானவர்களின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000-ஐ கடந்து விட்டது.
4,07,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிக்கு ஷாக் கொடுத்த 3 ஸ்டார்ஸ்
இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536ஆக உயர்ந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பில் ஈடுப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து இன்று மார்ச் 25 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 வரை அதாவது 21 நாட்கள் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் சிகிச்சை்ககான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிறது ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம்.
ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார்.
இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…
உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.
அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார்.
கமலின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Kamal slams Modis announcement of 21 days India lock down