தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பா.ஜ.கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் குறித்து கூறும்போது…
அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பித்தார் கமல். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார்.
ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வேஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது…
லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் சட்ட மன்ற, நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது.
என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன் தான்.
ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்பது ஒரு கூக்குரல். அது அவர்களாவே சொல்கிறார்கள்.
இனி என் தொண்டர்கள் அவ்வாறு அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.
நடிகர் கமல்ஹாசனின் வீடு முதலில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருந்தது.
மேலும் தான் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா என்ற பாடலில் பாடி ஆடினார்.
இதனையடுத்து கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheist