தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையைச் சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் 7 மாதங்களாக கற்பழித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளது.
தற்போது அந்த 17 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது…
மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவர்களிடம் மனிதாபிமானம் பார்க்க தேவையில்லை.
இவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நீதி விரைவாக செயல்பட வேண்டும், நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்ட ஒரு விஷயம் இது.” என கடுமையாக பேசினார்.
Kamal reaction to 17 Men Who Allegedly Raped 11 year old Girl case