ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோர்ட் தடை; மக்களின் குரல் வெல்லும் என கமல் கருத்து

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோர்ட் தடை; மக்களின் குரல் வெல்லும் என கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction for Sterlite copper Factory Court verdictதமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்றாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் அமைந்தது.

இந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, நீர் மற்றும் மண் மாசடைவதாகவும், அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதால் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் இறுதி நாளில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக்காரர்கள் வந்தனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமானது.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது.

இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையிட்டது.

எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

இதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதுபோல், ஆலையை திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனமும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்… ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

Kamal reaction for Sterlite copper Factory Court verdict

‘எவனோ ஒருவன்’ பட இயக்குனர் நிஷிகாந்த் காமத் உடல்நலக்குறைவால் மரணம்

‘எவனோ ஒருவன்’ பட இயக்குனர் நிஷிகாந்த் காமத் உடல்நலக்குறைவால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nishikant kamatமராத்தி மொழியில் டொம்பிவலி ஃபாஸ்ட் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிஷிகாந்த் காமத்.

இது 2005ஆம் வெளியாகி சிறந்த மராத்தி படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.

இந்த படத்தை மாதவன் நடிப்பில் ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் தமிழில் (2007) ரீமேக் செய்தார்.

மலையாளத்தில் ஹிட் அடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தை அஜய் தேவ்கன், தபூவை நடிக்க வைத்து இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் இவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லீரல் பிரச்னையால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 17ம் தேதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் நிஷிகாந்த் காமத்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Displaying VB PRELOOK LOCK PLAIN STILL wi

புதுச்சேரியில் மீண்டும் சுதந்திர போராட்டம்.; என் பதவியை விட மரியாதையே முக்கியம்.. – நாராயணசாமி

புதுச்சேரியில் மீண்டும் சுதந்திர போராட்டம்.; என் பதவியை விட மரியாதையே முக்கியம்.. – நாராயணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narayana samyஇந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் ஒன்று.

புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்த்தே புதுச்சேரி மாநிலம் முழுமை பெறுகிறது.

இந்த புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அடிக்கடி மோதல் வெடிக்கும்.

முதலமைச்சர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதற்கு ஆளுநர் கிரண் பேடி எதிர்ப்பு தெரிவிப்பார்.

இதனால் இவர்தான் எதிர்கட்சியோ? என்ற பேச்சும் அவ்வப்போது மாநில மக்களிடம் எழும்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில்…

“புதுச்சேரி மாநிலம் அடுத்ம சுதந்திர போராட்டத்திற்கு தயாராவதாக தெரிவித்தார்.

தனக்கு பதவி முக்கியம்மல்ல… சுய மரியாதை தான் முக்கியம்.

மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதனை காக்க போராடி வருகிறேன்.

எந்த சூழலிலும் புதுச்சேரி மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அதிகாரமே இல்லாத சிலர் மாநில உரிமைகளை தடுத்துவருகின்றனர்.” என்று பேசினார்.

இவ்வாறு மறைமுகமாக ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

Virtual Production தொழில்நுட்பத்தில் ப்ரித்விராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம்

Virtual Production தொழில்நுட்பத்தில் ப்ரித்விராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prithvirajஇந்தியாவில் திரைப்படங்கள் உருவாகி 100 வருடங்களை கடந்துவிட்டாலும் பல தொழில்நுட்பங்களில் ஹாலிவுட்டை விட பின்னோக்கியே உள்ளோம்.

virtual production என்ற மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவில் இதுவரை படங்கள் தயாராகவில்லை.

ஹாலிவுட்டில் ‘தி லயன் கிங்’ (2019), ‘அவதார்’ உள்ளிட்ட படங்கள் virtual production தொழில்நுட்பத்தில் உருவானவை.

திரைப்டங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைகளுக்கு முன்னால்தான் படப்பிடிப்பை நடத்துவார்கள்.

அந்த காட்சிகள் ஏற்ப திரைக்கு முன்னால் நடிகர் நடிகைகள் நடிப்பார்கள்.

தற்போது இந்த பாணியில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.

கோகுல்ராஜ் பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படம் மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளதாம்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை லேட்டஸ்ட் அப்டேட்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pranab mukherjeeமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த (ஆகஸ்ட்) 10ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் பிராணப் முகர்ஜிக்கு மூளையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

அப்போது அவர் கோமா நிலையை அடைந்தார்.

அதைத்தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவரது உடல் தற்போது சீராக இருப்பதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sandeep kishanதிரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது பலரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படித்தான் சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் இருவரின் நட்பு. இருவருமே எந்தவொரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை என்றாலும் நெருங்கிய நண்பர்களாவே இருந்து வருகிறார்கள்.

அந்த நட்பு இப்போது திரையில் எதிரொலிக்கவுள்ளது. ஆம், இருவரது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கவுள்ளனர். ‘வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சந்தீப் கிஷன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ‘கண்ணாடி’ படத்தின் தெலுங்கு பதிப்பை தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ படத்தை தயாரித்து வருகிறார்.

‘பலூன்’ படத்துக்குப் பிறகு ‘சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் இயக்குநர் சினிஷ். தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார். பெரும் எதிர்ப்பில் உள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படம் இவருடைய தயாரிப்பு தான். அதனை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்க வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ் – சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விவாஹ போஜனம்பு’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராம் அப்பாராஜூ இயக்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. முழுக்க யதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் திருமண நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு திருமண காமெடி கலாட்டா தயார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்..

More Articles
Follows