தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்றாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் அமைந்தது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, நீர் மற்றும் மண் மாசடைவதாகவும், அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதால் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் இறுதி நாளில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக்காரர்கள் வந்தனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமானது.
எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது.
இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையிட்டது.
எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
இதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதுபோல், ஆலையை திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனமும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்… ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
Kamal reaction for Sterlite copper Factory Court verdict