‘முதன் முறையாக நட்சத்திரத்தை இயக்குகிறேன்…’ – கமல்ஹாசன்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’.

ராஜீவ் குமார் இயக்கிவந்த இப்படத்தை கமலே தற்போது இயக்கி நடித்தும் முடித்துள்ளார்.

இவருடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தன் மகள் ஸ்ருதியை இயக்கிய அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் கமல் கூறியதாவது…

”இதற்கு முன் நான் நடிகர்களை மட்டுமே இயக்கியுள்ளேன்.

ஒரு நட்சத்திரத்தை நான் இயக்கியதில்லை. ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமின்றி நட்சத்திரமும் ஆவார். எனவே எனக்கு இது புதிய அனுபவம்தான்.

‘தசாவதாரம்’ படத்தில் நடித்த போது அதில் பேசிய அமெரிக்க உச்சரிப்புகளுக்கு ஸ்ருதிதான் காரணம்” என்றார்.

‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைவண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
கன்னடத்தில் பிரபலமான நைனா சர்வாருக்கு இதுதான் முதல் தமிழ் படம்.

இந்நிலையில், தனது சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது… “நான் பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரு பெங்களூரு.

இப்படத்தில் எனக்கு நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான கேரக்டர். உடனே ஒப்புக் கொண்டேன். ஹீரோ சிவாவுடன் நடிக்கும்போது கன்வீனியன்டாக இருந்தது. தமிழைப் புரிந்து கொள்வேன். ஆனால் பேச தெரியாது.

நானும் இயக்குனரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம். இப்படத்தில் பவர் ஸ்டாருடன் எனக்கு காட்சிகள் கிடையாது. அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் தயக்கம் இல்லாமல் நடிப்பேன்.

என் பேவரைட் ஹீரோ எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான். ஹீரோயின் நயன்தாராதான்” என்றார்.

ரெமோ ஆன்ட்டி பற்றிய தன் மகள் கேள்விக்கு பதில் சொல்லாத சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தன் உறவுக்கார பெண் ஆர்த்தியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இத்தம்பதியருக்கு ஆராதனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

அதுவும் பெண் வேடம் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனிடையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ஆங்கிலத்திலேயே பேசி அசத்தியிருக்கிறார்.

அதில்… ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்துவிட்டது. அடிக்கடி பார்ப்பாள்.

அந்த அம்பு பட்டவுடன் நீங்க ரெமோ ஆன்ட்டியாக மாறிடுவீங்களாப்பா? என் கேட்பாள்.

எனக்கு என்ன பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாயா என்ற த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார்.

தாஸ் இயக்கும் இப்படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு டோரா (#Dora) என பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் காஷ்மோரா, திருநாள், இருமுகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

AAA படத்தில் சிம்புவின் ஜோடி யார்? ஸ்ரேயா-த்ரிஷா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

மூன்று கேரக்டர்களையும் வேறுபடுத்தி காட்ட கடும் உடற்பயிற்சி செய்து தன் உடல் அமைப்பை மாற்றி வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர் கொஞ்சம் வயதான கேரக்டராம்.

அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம்.

இந்த கேரக்டர் அம்மா கேரக்டர் என்றும் ஸ்ரேயா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சிம்புவும் ஸ்ரேயாவும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் விஷால், ராஜ்கிரண் இருவரும் நடிக்கின்றனர்.

நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தளங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் நடிக்கிறேனா? என்று என்னிடம் பலர் விசாரித்தனர். ஆனால் இது தொடர்பாக அப்படக்குழுவினர் யாரும் என்னை சந்திக்கவில்லை. அச்செய்தி முற்றிலும் வதந்தியே” என்றும் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows