தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலையில் கடந்த 11-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மலையேற்ற பயிற்சிக்கு (டிரெங்கிங்) சென்ற சென்னை, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் இவர்கள் அனைவரும் அதில் சிக்கிக் கொண்டனர்.
ஒரு சில தப்பித்துவிட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதுவரை 16 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த உஷா தமிழ் ஒளி மற்றும் அனுவித்யா குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், இந்த விஷயத்தை ஒரு பாடமாகக் நினைத்து, இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
Kamal paid his respects to the victims of Kurangani forest fire, Ms. Nisha & Ms.Anuvidhya. He met their families today and offered condolences to them.