தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்தவொரு செயலையும் சமூகம் சார்ந்த தொலை நோக்கு பார்வையுடன் பார்ப்பவர் கமல்ஹாசன்.
இவர் அண்மைகாலமாக நாட்டு நடப்புகள் குறித்து தன் கருத்துக்களை தொடர்ந்து கூறிவருகிறார்.
இதனிடையில் ஜல்லிக்கட்டு போரட்டாங்கள் தொடர்பாக கமலின் நற்பணி மன்றத்தை சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தன் நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் மற்றும் அதனை சார்ந்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார் என்பதை பார்த்தோம்.
இதுபற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காத பட்சத்தில் கிடைத்த தகவல்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை கூட்டத்தின் சில துளிகள்..
கடந்த 35 வருஷமாக நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம்.
நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்த வித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள்.
முதலமைச்சாராக இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை.
நான் எட்டாம் வகுப்பு. ஆனாலும் எனக்கும் #சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும்.
நாங்கள் காவல் துறையினரிடம் பேசுவதற்கும், சட்டம் படித்த வல்லுனர்கள் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது.
அரசியலுக்கு வருவது என்பது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல.
கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா?
சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத் தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி?
நான் இப்போது மட்டும் அறிக்கைகள் விடவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன்.
அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தேன். ஆனால் இப்போதுதான் நான் கூறுவது அவர்களுக்கு கேட்கத் தொடங்கியுள்ளது.
நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன்.
ஆனால் நான் செய்யும் அரசியல் ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்.
நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன்.
என்னுடைய கட்சி கொடி டெல்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன்.
பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன்.
இனி அந்த மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்க்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசர்கள் முன் வரவேண்டும்.
என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு #சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.
தவறு செய்திருந்தால் நான் நிச்சயம் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால்,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன்.
நாம் செய்யும் நற்பணி கண்டு நம் மாநிலம் மட்டுமில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிங்களும் அழைத்து பாராட்ட போகிறது.
நற்பணி இயக்கத்தின் மூலம் ரூ. 20 கோடி வரை கடந்த 20 ஆண்டுகளில் நற்பணி செய்துள்ளனர்.
எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரீகமான முறையில் கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள்.
எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன்.
நல்லது செய்ய நல்ல உள்ளம் போதும். அது உங்களிடம் உள்ளது. அதற்கு துணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
Kamal meeting with Lawyer fans news updates