தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையே உலுக்கி வருகிறது.
இதன் பாதிப்பில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. சென்னையை மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.
கொரோனா தாக்குதலில் சென்னையை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக தமிழக முதல்வரே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், நாமே தீர்வு என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்…
தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையாகிவிட்டது. நான் தட்டுனது உங்களின் கவன ஈர்ப்புக்காகவே. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்கடக்க நடந்து பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாட காட்சிகள் பசியால் மரணம்… இவை எல்லாமும் நம் எல்லோரின் அலட்சியத்தால் தான். இதை எல்லாம் பார்க்கும் கோபம் வருகிறது.
கொள்ளை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது விமர்சனம் வைக்க இது நேரம் அல்ல. இது சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல.
நாளை என்ன, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான, ஆக்கப்பூர்வ செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். சென்னையை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றி விடக்கூடாது. இதற்கான முயற்சி தான் நாமே தீர்வு எனும் இயக்கம்.
இது தனி மனித இயக்கம் அல்ல, நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். இனி வரும் நாட்களுக்கு நாள் சாதி, மதம், மொழி, கட்சி பேதங்கள் கடந்து ஒரே கோட்டில் இணைவோம்.
இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்.
என கமல் அதில் பேசியுள்ளார்.
இணைந்து மீட்டெடுப்போம் சென்னையை. அழையுங்கள் 63698 11111.
Kamal launches Naame Theervu to help Chennai in fight against Corona