ரஜினியின் 2.0 படம் விலகியதால் குறி வைக்கும் விஸ்வரூப கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்டமான படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடவிருந்தனர்.

ஆனால் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் வெளியீடு இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகவுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதியை குறி வைத்து கமல் தன் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது கமல் தன் விஸ்வரூபம் 2 படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பியாண்ட் த க்ளவுட்ஸ் டிரைலர்; ஈரானிய இயக்குநர் மஜீத்துக்கு பாராட்டு மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் திரைக்கதையில் முன்னிறுத்திருக்கிறார்.

இது போன்ற சிந்தனை மஜீதியின் தனி சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றியதில் மட்டற்ற சந்தோஷத்தை பெற்றிருக்கிறோம்.

மேலும் நாமா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் இந்த திரைப்படம் உலகளவில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷரீன் மன்ந்ரி கேடியா பேசுகையில்,‘இந்திய மக்களின் ரசனையையும், சென்ட்டிமெண்ட்ஸையும் இயக்குநர் மஜீதியால் எப்படி துல்லியமாக கையாள முடிந்தது என்பதைப் பார்த்து நம்பமுடியாத வகையில் ஆச்சரியப்பட்டேன்.

கதைகள் மொழியின் வரம்புகளுக்கு உட்படாதவை என்ற அவரது நம்பிக்கை இதில் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. ஒரு நேர்மையான உணர்வை திரைமொழியில் சொன்னால், அது பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் என்பதை இதன் மூலம் மீண்டும் மஜீதி நிரூபித்திருக்கிறார்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா பேசுகையில்… ‘நடிகர்கள் இஷான் கட்டார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவர்களும் இயக்குநர் மஜீதியின் வழிகாட்டலை உறுதியைப் பின்பற்றி, அவர் காட்டும் புதிய உலகை பார்வையாளர்களுக்கும் காட்டியிருக்கிறார்கள்.

இந்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.‘ என்றார்.

இதனிடையே இந்த படம் ஒராண்டிற்கு முன்னர் (29 1 2017) இதே நாளில் மும்பையிலுள்ள முகேஷ் மில்லில் முதல் நாள் படபிடிப்புடன் தொடங்கியது. இன்று அதே நாளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இதற்காக கடுமையாக உழைத்த படக்குழுவினருக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trailer of Majid Majidis Beyond The Clouds goes viral

சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி ரூட்டில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிகர்கள் படம் தயாரிப்பது ஒன்றும் புதிதல்ல.

ஒரு சிலர் அவர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பார்கள். மற்ற சிலர் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பார்கள்.

இதில் சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோர்கள் தாங்கள் நடிக்காத படமென்றாலும் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லோ பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுக்கின்றனர்.

36 வயதினிலே, பசங்க2, மகளிர் மட்டும், கடுகு (ரிலீஸ் மட்டும்) ஆகிய படங்களை சூர்யா தயாரித்திருந்தார்.

அதுபோல் காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு ஆகிய நல்ல படக்களை தயாரித்திருந்தார் தனுஷ்.

இவர்களைத் தொடர்ந்து ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்திருந்தார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் புதிய திறமையான கலைஞர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவும், தரமான படங்களை கொடுக்கவும் முடிவு செய்த சிவகார்த்திகேயன் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதன் மூலம் குறைந்த செலவில் புதிய படங்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Sivakarthikeyan plans to produce low budget movies to support Talented Youngsters

ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரையே இல்லை… : சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டது.

இதனை கண்டிக்கும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ச.ம.க தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்துக் கொண்டு பேசினார்.

முன்னதாக, கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு சரத்குமார் சைக்கிளில் பயணம் செய்து மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றவர்வர் ரஜினிகாந்த்.

அவர் காட்டுவது பாபா முத்திரை அல்ல; அது ஆட்டுத்தலை. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?” என கடுமையாக விமர்சித்துப் பேசினார் சரத்குமார்.

Rajini showing Goat head Its not Baba symbol says Sarathkumar

போன வருசம் மிஸ் ஆச்சு; இந்த வருசம் தனுஷ் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம், எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் மாரி 2 படம் படத்தை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை 28ஆம் தேதி (ஒரு நாள் முன்னதாக 27) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படத்தையும் தனுஷ் பிறந்தநாளில் வெளியிடவிருந்தனர்.

ஆனால் சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போனது.

எனவே போன வருடம் போல இந்த வருடம் மிஸ் ஆகாது என நம்பலாம்.

பாலாஜிமோகன் இயக்கவுள்ள மாரி 2 படத்தில் தனுஷ் உடன் சாய்பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது ஒரு படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் சமந்தா, சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் பொன்ராம் இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows