தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு வடசென்னை மற்றும் தென்சென்னை ரசிகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது அவர் பேசியதாவது…
35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்;
இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவையான நேரம், தேவை ஏற்பட்டுள்ளது.
நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்று பேசினார்.
நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.