தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஒரு சிலர் கடன் சுமையால் தற்கொலையும் செய்துக் கொண்டுள்ளனர்.
ஆனாலும் கொரோனா ஊரடங்கு இன்னும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..
அவரின் பதிவில்…
சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது.
விலை உயர்வு,தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே.
தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.
அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு.