தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் டிவி நடத்திய அது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா? என்று கேட்டவர்கள் கூட அதை ஒரு முறையாவது பார்த்தார்கள் என்பதே உண்மை.
கமல் தொகுத்து வழங்கிய பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக பிக்பாஸ் வின்னராக ஆரவ் செலக்ட் ஆனார்.
100 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 200 நாட்களுக்கு மேலாக விஜய் டிவி மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பியது எல்லாம் தனிக்கதை.
இதில் பங்குபெற்ற ஓவியா தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். ஜீலி தமிழக மக்களின் வில்லி போல சித்தரிக்கப்பட்டார்.
மற்ற கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியே சினிமா வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத் தர தொடங்கியது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளதாகவும் அதனை கமல் அல்லாத வேறொரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்றனர்.
தற்போது கமலே தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது.
முதல் சீசனில் கமல் சினிமா துறைச் சார்ந்தவராக இருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யத்தின் என்ற கட்சியின் தலைவராகிவிட்டார்.
எனவே இந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அரசியல் பரபரப்போடு காணப்படும் என்றே கூறலாம்.
இதற்கும் சிலர் போர்க்கொடி பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை….
