தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத்பாசில் நரேன் சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’.
இந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியானது. இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.
உலகளவில் ரூபாய். 300 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா ஆந்திராவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளிவருவதால் 7 ஆண்டுகளுக்குப் பின் கமல் ஒரு பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தின் மிரட்டும் வெற்றியால் இயக்குனர் லோகேஷ்க்கு கமல் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கினார்.
மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு அவரது கேரக்டர் பெயரான ரோலக்ஸ் என்ற பிராண்டட் வாட்சை பரிசாக வழங்கினார்.
திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’.
எனவே புதிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது
இந்த நிலையில் இந்த வாரம் ஜூன் 17ஆம் தேதி ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘யானை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ‘விக்ரம்’ படத்தின் மிரட்டும் வெற்றியால் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் ஹரி அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் கமல்ஹானை சந்தித்து ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘யானை’.