தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பத்திரிகையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உங்களின் தனிக்கட்சியில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்? என்றனர்.
ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களை பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம்.
உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை
அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?
மேலும் அரசியல் கட்சி தொடக்கத்தை புரட்சி பிறந்த நாளில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.