தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காரைக்காலை மையம் கொண்டு வந்த நிவர் புயல் திடீரென வடக்கு நோக்கி கடலூர் & புதுச்சேரிக்கு சென்றது.
அதன்பின் தீவிரப்புயலாக வலுவிழந்து இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குள் நிவர் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது,
இதனால் கடற்கரையோரத்தில் இருந்த குடிசைகள், மரங்கள், விசைப்படகுகள் உள்ளிட்டவை சின்னபின்னமாயின.
மேலும் சென்னையிலும் சில பகுதிகளில் சேதம் அடைந்துள்ளன.
பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.
எனவே புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசனும் சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாமில் மக்களை சந்தித்து வருகிறார்.
அங்குள்ள 250 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன்பின்னர் அவர் பேசியதாவது…
“விளம்பர பலகைகள் விழுந்து ஏற்படும் மரணம் இன்னமும் நடைபெறுகிறது.
நாங்கள் அரசு கிடையாது. அரசிடம் உள்ளது போல் கஜானா எங்களிடம் இல்லை.
எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். நிவாரணம் என்பது இந்த வருடத்திற்கானது. எனவே முடிவு செய்து நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும்” என பேசினார்.
Kamal Haasan says his motive is good things sould happen for public