தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழகத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னையைக் கடந்து தமிழகத்தில் மதுரை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்…
‘போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது.
வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது’ என பதிவிட்டுள்ளார்.