நான் பூ அல்ல; விதை… மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் மற்றும் ரஜினியின் அரசியல் வருகையை மறைமுக தாக்கி பேசியிருந்தார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.

அப்போது அவர்கள் காகித பூக்கள். அது மணக்காது என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் இன்று பேசியுள்ளார்.

“நான் பூ அல்ல; விதை. என்னை நுகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள் வளருவேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நாளை கமல் தன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

காகித பூக்கள் மணக்காது… ரஜினி-கமல் அரசியல் பற்றி ஸ்டாலின் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் உலகில் இருந்து அரசியல் பயணத்திற்கு கமல் மற்றும் ரஜினி இருவரும் தயாராகிவிட்டனர்.

நாளை கமல் தன் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார். முதற்கட்டமாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார்.

நாளை இவரது அரசியல் பயணம் தொடங்கவுள்ள நிலையில் கருணாநிதி, ரஜினி, விஜயகாந்த், சீமான் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் நட்பு ரீதியாக பேசினார்.

இந்நிலையில் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.

திமுக என்பது அரசமரம் போன்றது. அதை யாராலும் அசைக்க முடியாது.

அரசியலுக்கு தற்போது வருபவர்கள் காகிதப் பூக்கள் போன்றவர்கள். அது மணக்காது என்று மறைமுக தாக்கி பேசினார்.

நாச்சியார் படத்தில் அண்ணி ஜோதிகா கேரக்டர் செம… கார்த்தி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘நாச்சியார்’ படம்
நல்ல விமர்சனங்களை பெற்று
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு பல பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

‘நாச்சியார்’ படத்தை பார்த்து நடிகர் சிவகுமார் அண்மையில் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் இப்போது நடிகர் கார்த்தியும் ‘நாச்சியார்’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘நாச்சியார்’ ரொம்பவும் ‘நீட்’டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் .

பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட
இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை..? கமல் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை பிப்ரவரி 21ஆம் தேதி கமல் தன் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக பல தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று முன் தினம் நடிகரும் தன் நண்பருமான ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இன்று சீமானை சந்தித்து பேசியுள்ளார்.

பல கட்சித் தலைவர்களை சந்தித்தாலும் இதுவரை அதிமுக தலைவர்களை கமல் சந்திக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது… ‘அ.தி.மு.க. ஆட்சியே சரியில்லை என்கிறேன். பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன்?’ என்று அதிரடியாக கூறினார்.

உங்களைப் போன்றவர்தான் அரசியலுக்கு வரனும்.. கமலுக்கு விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற கமல்ஹாசன், அங்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், அரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்ததாக கூறினார்.

தாம் தொடங்கவுள்ள அரசியல் பயணத்திற்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் விஜயகாந்த் கூறியதாகவும் தெரிவித்தார்.

மண்ணின் மைந்தர் கமலுக்கு முன்னுரிமை…; சீமான் கூட்டணியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து இன்று சீமானை சந்தித்தார் கமல்ஹாசன்.

இதுநாள் வரை அவர்களின் இல்லம் தேடி கமல் சென்றார். ஆனால் இந்த முறை கமல் வருவது நல்லதல்ல. நானே வருகிறேன் என சீமான் கமலை சந்திக்க வந்தார்.

அதன்பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

அப்போது சீமான் கூறியதாவது:-

படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகன்.

நானும் கமலும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள்.

அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொடங்குகிறார்.

கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.

மண்ணின் மைந்தர் கமலுக்குதான் முன்னிரிமை.

நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.” இவ்வாறு அவர் கூறினார்.

கமல் கூறும்போது…

‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியம். நாளை எனது கொள்கைகளை அறிவித்த பின் சீமான் தனது நிலைப்பாட்டை கூறுவார்’ என்றார் கமல்.

More Articles
Follows