தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் அருகே, அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் அரசு பெண் ஊழியர் சரண்யா. (வயது 24)
அப்போது தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வேளாண்மை துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இவரின் அலுவலகத்தில் (வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில்) கழிப்பிட வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் கூறியுள்ளதாவது…
“இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை.
அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.
இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2020
என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Kamal Haasan on TN govt employee dies slipping into septic tank