தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் அவதிக்குள்ளான மக்களுக்கு நல்லுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் பலரும் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கமல்ஹாசனின் படம் பொறித்த பைகள் இடம் பெற்றுள்ளன. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில்…
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் நாங்கள் இருக்கிறோம் உதவிட என முன்வந்து, எளிய மக்கள் இந்த ஊரடங்கில் பாதிக்கப்படாமல் காத்திடக் கட்சி பேதமின்றி, நாம் பணி செய்ய வேண்டும் என்கின்ற என் குரலுக்குச் செவி சாய்த்து, தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுடன் இணைந்தும், தனியாகவும் அயராது களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மையத்தினர் அனைவருக்கும் வணக்கம்.
உதவி செய்யும் போது ஊடகங்களை அழைத்துச் சென்று விளம்பரப்படுத்துவதையோ, அல்லது உணவுப் பொருட்களின் மேல் சின்னத்தையோ, தலைவர் படத்தை ஒட்டி விளம்பரப்படுத்துவதையோ மக்கள் நீதி மையம் செய்யாது. உங்களிடம் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
வாழ்வாதாரம் நசித்துப் போய், உள்ளம் வெம்பி இருக்கும் எளிய மக்களை இந்தப் புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தி விடலாம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.