அ.தி.மு.க. தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை..? கமல் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை பிப்ரவரி 21ஆம் தேதி கமல் தன் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக பல தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று முன் தினம் நடிகரும் தன் நண்பருமான ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இன்று சீமானை சந்தித்து பேசியுள்ளார்.

பல கட்சித் தலைவர்களை சந்தித்தாலும் இதுவரை அதிமுக தலைவர்களை கமல் சந்திக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது… ‘அ.தி.மு.க. ஆட்சியே சரியில்லை என்கிறேன். பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன்?’ என்று அதிரடியாக கூறினார்.

உங்களைப் போன்றவர்தான் அரசியலுக்கு வரனும்.. கமலுக்கு விஜயகாந்த் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற கமல்ஹாசன், அங்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், அரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்ததாக கூறினார்.

தாம் தொடங்கவுள்ள அரசியல் பயணத்திற்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் விஜயகாந்த் கூறியதாகவும் தெரிவித்தார்.

மண்ணின் மைந்தர் கமலுக்கு முன்னுரிமை…; சீமான் கூட்டணியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து இன்று சீமானை சந்தித்தார் கமல்ஹாசன்.

இதுநாள் வரை அவர்களின் இல்லம் தேடி கமல் சென்றார். ஆனால் இந்த முறை கமல் வருவது நல்லதல்ல. நானே வருகிறேன் என சீமான் கமலை சந்திக்க வந்தார்.

அதன்பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

அப்போது சீமான் கூறியதாவது:-

படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகன்.

நானும் கமலும் ஒரே பூமி, ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள்.

அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொடங்குகிறார்.

கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.

மண்ணின் மைந்தர் கமலுக்குதான் முன்னிரிமை.

நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.” இவ்வாறு அவர் கூறினார்.

கமல் கூறும்போது…

‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியம். நாளை எனது கொள்கைகளை அறிவித்த பின் சீமான் தனது நிலைப்பாட்டை கூறுவார்’ என்றார் கமல்.

Breaking: கோச்சடையான் ரூ. 8.5 கோடி பாக்கி; லதா ரஜினிக்கு கோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சௌந்தர்யா ரஜினி இயக்கிய படம் கோச்சடையான்.

இப்படம் வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

இப்படம் முழுவதும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக கெடு ஆட்பிரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடி கடனில் ரூ.8.5 தொகையை லதா ரஜினிகாந்த் திருப்பி தரவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கைக விசாரித்த கோர்ட், கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?; மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்யுடன் நடிப்பது கீர்த்தி என்ற நடிகை இல்லையாம்; ரசிகையாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசும்போது..

“மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக பார்க்க முடியாது.

எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கு பெண் தேடும் கலர்ஸ் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“அறிந்தும் அறியாமலும்” பட மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆர்யா.

இவருக்கு சினிமாவில் ப்ளேபாய் என்ற பெயரும் உண்டு. நல்ல உடற்கட்டுடன் வலம் வரும் ஆர்யாவுக்கு திருமண அதிர்ஷ்டம்தான் இன்னும் அமையவில்லை.

எனவே பலரும் இந்த கேள்வியை கேட்க, ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டார்.

தன் திருமணத்துக்கு பெண் தேடுகிறேன் என கூறினார். மேலும் ஒரு வெப்சைட் ஒன்றும் ஆரம்பித்து விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தற்போது அந்த விண்ணப்பங்களை எடுத்து சில பெண்களை தேர்வு செய்து கலர்ஸ் என்ற புதிய தமிழ் சேனல் சுயவரம் நடத்துகின்றனர்.

இதற்காக ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பெரிய செட் அமைத்து அதில் இருந்து பெண் திடும் படலம் நடக்கிறது.

இதில் தேர்வாகும் பெண்ணை வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கும் என்றும் கூறினார் கலர்ஸ் சேனல் தலைமை வர்த்தக அதிகாரி அனுப் சந்திரசேகர்.

இந்த சேனலில் இன்று (பிப்., 19) தொடங்கும் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி, சுயம்வரம் பாணியில் ஆர்யாவுக்கு பெண்தேடும் நிகழ்ச்சி என்கிறார்கள். இதில் வெற்றி பெறுகிறவரை ஆர்யா நிஜ திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியை தனது முத்தாய்ப்பான நட்சத்திர நிகழ்ச்சியாக கருதுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார்.

Colors TV searching Bride for Arya by Enga Veetu Mapillai show

More Articles
Follows