தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
மேலும் தான் விரைவில் கட்சி தொடங்கி அரசியல் சேவை செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த சுமையை மக்கள்தான் ஏற்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பஸ் கட்டணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
Kamal HaasanVerified account @ikamalhaasan
பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!