தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கட்சி சின்னத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு மத்தியில் நட்சத்திரம் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று இருந்தது.
எனவே இதனை விமர்சித்து பலரும் தங்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.
அதே போன்ற பல சின்னங்கள் முன்பே வந்துள்ளன என ஆதாரங்ளுடன் மீம்ஸ்களை உருவாக்கி வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:
மும்பையில் இருந்து தமிழர் பாசறையை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
எங்களது கட்சி சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது அவர்கள் என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்கு தந்து விட்டனர்.
விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர்.
எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என தெரிவித்தார் கமல்ஹாசன்.
ஒருவேளை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பார் கமல்? எனவும் தங்கள் கேள்விகளை வைக்கின்றனர் சிலர்.
