தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்தாண்டு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதன்பின்னர் இன்று தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் கமலஹாசன்.
இன்று தொடங்கி 3 நாட்கள் எட்டு பகுதிகளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம்.
கோவை, மதுரை, கடலூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100 தொகுதி பொறுப்பாளர்களை கமலஹாசன் இன்று சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய கமல்ஹாசன்..
தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
நீங்கள் தேர்தல் பணி மற்றும் தொகுதி பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். உங்களுடைய பணி மிகவும் கடினமான பணி. அதைச் சிறப்பாக செய்யுங்கள்” என கட்டளை போட்டாராம்.
Kamal Haasan announced not alliance with Dravidan parties at today meeting