தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும் மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள், காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்….
காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்.
இது நம் அனைவரின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.
இளைஞர்கள், ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் அவரை சந்தித்து பேச உள்ளோம்.
தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை அவசியம்.” என்றார்.