தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா துறை என்று எடுத்துக் கொண்டால் அதில் எல்லா துறையிலும் இருப்பார் கமல்ஹாசன்.
அதற்கான தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் அல்ல அவர்.
நாட்டில் நடக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கவனித்து அதன் மீதான தன் பார்வை குறித்து கருத்துக்களை கூறி வருபவர்.
இந்நிலையில் ஒரு பிரபல தனியார் சேனலுக்கு இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது…
“எவர் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது எனது முதல் தகுதியாக நான் பார்க்கிறேன்.
நான் 40 வருடங்களுக்கு மேலாக அரசியல் பேசி வருகிறேன்.
தற்போது காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும்.
அரசியலில் தவறுகள் அதிகரிக்க மக்களின் கொந்தளிப்பு ஏற்படத்தான் செய்யும்.
எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள்தான் நமக்கு தேவை.
அதுபோல் நாம் பணத்துக்காக வாக்குகளை விற்கக்கூடாது. ஒருவேளை விற்றுவிட்டால் அதன் மீது கேள்வி கேட்கும் உரிமையில்லை.
நாலு வருஷம் இந்த அரசை விட்டு வைப்பது நல்லதா? என்று மக்களிடையே கொந்தளிப்பு உள்ளது.
சட்டத்தின் முடிவுகளை வைத்துக் கொண்டு நாலு வருடம் போகட்டும் என்று சொல்லக்கூடாது. இது கட்டாய திருமணம் போன்று உள்ளது.
மக்கள் தேர்ந்தெடுத்தவர் வேறு ஒருவரை. ஆனால் ஆட்சி செய்துக் கொண்டிருப்பது மற்றொருவர்.
கோயிலுக்கு செல்லும் பக்தன் உள்ளே சென்றால் வேறு ஒரு கடவுளை உள்ளே பார்ப்பது போன்று உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்கள் அது சம்பந்தப்பட்டவர்கள் சொல்லட்டும். மக்களிடையே நான் எடுத்துரைப்பேன்.
356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தால் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் விரும்பாவிட்டால் ஆட்சியை கலைக்க கூடாதா?
இதுபோன்ற ஆட்சியை பலமுறை பார்த்துவிட்டோம். அது அதிமுக, திமுக, காங்கிரஸ் யாராக இருந்தாலும் அதுதான்“
என்று இன்றைய அரசியல் நிலவரம் குறித்து சூடான பதில்களை கூறியுள்ளார் கமல்ஹாசன்.
Kamal angry interview about current politics in Tamilnadu 2017