இளையராஜா 75 நிகழ்ச்சியில் மகள் ஸ்ருதியுடன் இணைந்து பாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75 என்ற பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்களாக நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தனது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடல்களை பாடினார்.

ஹேராம் படத்திலிருந்து ஹே ராம் ராம் பாடல்களை பாடினார். இதில் சில திருத்தங்களை இளையராஜா அதையும் சரி செய்து பாடினார்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற, நினைவோ ஒரு பறவை என்ற பாடலை பாடினர்.

விரும்பாண்டி படத்திலிருந்து உன்ன விட இந்த உலகத்துல என்ற பாடலை பாடகி சித்ரா உடன் இணைந்து பாடினார்.

ஒவ்வொரு பாடல்களின் போதும் சில சுவாரஸ்யமான நினைவுகளை கமலும், இளையராஜாவும் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியின் சிறப்பு.

என்னைவிட கமலுக்கு தான் நல்ல பாட்டு கொடுத்தார் இளையராஜா..; ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது.

அதில் நடிகர் ரஜினிகாந்த பேசினார். அவர் பேசியதாவது…

எல்லா கலைகளை விட சிறந்தது இசை கலைதான்.

இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உள்ளது. சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், அது தானாகவே உருவாகும்.

இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.

அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார் என்று தான் கூப்பிடுவேன்.

ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார் இளையராஜா.

அந்த நிமிடத்திலிருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை, அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார்,

எனது படங்களை விட கமல் படங்களுக்கு தான் மிக அருமையான இசைகளை கொடுத்தார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார், அவரை (கமலை) கேட்டால் ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார்.

அதன்பின்னர் மேடைக்கு வந்தார் கமல்ஹாசன். அப்போது ஆமா என் படத்தை விட ரஜினிக்கு நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார் இளையராஜா என்றார்.

இளையராஜா குரலுக்கு ரஹ்மான் இசை; இசைஞானிக்கு தங்க வயலின் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாளை மாலையும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.

இன்றைய நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு தங்கள் சினிமா பயணத்தில் இளையராஜாவின் பங்கு குறித்து பேசினர்.

நடிகர்கள் சிவகுமார், விஷால், மனோபாலா, நவரச நாயகன் கார்த்திக், ராதா, நதியா, சுஹாசினி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் மேடையேறி பேசினர்.

நடிகைகள் ரம்யா நம்பீசன், இனியா, நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா, நமீதா உள்ளிட்டவர்கள் இளையராஜா பாடலுக்கு ஆடினர்.

நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, லட்சுமி பிரியா, அனுஹாசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார்.

‘ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டு இளையராஜா பேசினார்.

”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என ஏஆர். ரஹ்மான் அவரை புகழ்ந்து பேசினார்.

இதில் திடீரென நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்கள் இளையராஜா பாடல் பாட ஏஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்.

அடுத்த கனமே `மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா பாட அதற்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்ட அந்த இடமே அதிர்ந்தது.

Ilayaraaja 75 Highlights AR Rahman compose music of Ilayaraaja voice

அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’.

கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படமானது கரிசல் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

தனது அண்ணனை கொலை செய்தவனைப் பழிவாங்கும் பதினைந்து வயது சிறுவன், தனது தந்தையுடன் ஒரு வாரம் காடுகளில் சுற்றித் திரிந்து, நீதிமன்றம் செல்லும் பயணம் தான் இந்த ‘வெக்கை’ நாவல்.

தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த சிறுவன் கேரக்டரில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே ‘அழகு குட்டி செல்லம்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் கென் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran

காதல் கலந்த ஹாரர் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் K. ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்“.

தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார்.

மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் K.ஜோதிபிள்ளை கூறியதாவது..

இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது.

இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றிதான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெய்ண்டிங் துறையில் மிகபெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார்.

இடையில் காதலில் விழும் அவனுக்கு சில பிரச்னைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டான் அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்கையில் ஜெயித்தான் என்பதை ஹாரர், காதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்.

ஹாரர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் K.ஜோதிபிள்ளை.

ஒளிப்பதிவு – ராஜாமணி
இசை – ஸ்டீபன் ராயல்
பாடல்கள் – இளையகம்பன், கவிகாற்கோ, நிலவநேசன்
எடிட்டிங் – பாலா
கலை இயக்குனர் – ஸ்ரீதர்
ஸ்டன்ட் – தளபதிதினேஷ்
நடனம் – பார்கவ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை, வசனம் – சுகுணா கந்தசாமி
தயாரிப்பு – K.ஜோதி பிள்ளை – சுகுணா கந்தசாமி
திரைக்கதை, இயக்கம் – K.ஜோதிபிள்ளை, சாமுவேல்ராஜ்.

Director Jothipillai talks about Kadhal oru Oviyam movie

நீங்கதான் எங்க ரோல்மாடல்.; ரசிகர்கள் பேச்சால் சந்தோஷத்தில் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் தில்லுக்கு துட்டு 2.

இப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது…

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசும்போது :-

சந்தனம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும்.

மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.

இயக்குநர் ராம்பாலா பேசும்போது :-

30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளபடவில்லை. அதன்பிறகு தான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார். அது தான் ‘தில்லுக்கு துட்டு’. இக்காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம்.

ஆனால், ‘தில்லுக்கு துட்டு’ 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன். மாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த கதையை எழுதினோம். ஷபீர் இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. படத்தொகுப்பு புதுமுகம் செஞ்சி மாறன் செய்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தானம் பேசும்போது :-

நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம்.

அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.

‘மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார். கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ்,

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம்.
பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.

வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

இடையில்… இனி காமெடியனாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு.. படங்களை இயக்குவேன். நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன்.

சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். பி.ஆர்.ஓ. ஜான்சன் அவர்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

Santhanam talks about his fans and Dhillukku Dhuddu 2 movie

More Articles
Follows