தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்று காரணமாக தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான வசந்தகுமார் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கமல் மற்றும் ரஜினி தங்கள் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
கமலின் பதிவில்…
நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.
ரஜினியின் பதிவில்…
அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Kamal and Rajinis condolence message for Vasanthakumar demise