தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சபரிமலை சந்நிதானத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது.
இதனை ஒரு அமைப்பினர் வரவேற்றாலும் பெண்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான ரஜினி & கமல் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…
“சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
“சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் சபரிமலை ஐதீகத்தை பின்பற்ற வேண்டும்.
#MeToo – மீ டூ பரப்புரை பெண்களுக்கு சாதகமான ஒன்று, ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்திவிடக் கூடாது.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.