தாசரி நாராயணராவ் மறைவுக்கு கமல்-ரஜினி-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தாசரி நாராயணராவ் மறைவுக்கு கமல்-ரஜினி-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajiniஇந்திய திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் காட்டிய தாசரி நாராயணராவ் நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவையொட்டி, இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…, ‘தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர் கே.பாலச்சந்தர் பார்த்து வியந்தவர் தாசரி நாராயணராவ் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஜினி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.. “இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ்.

அவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுஇணை செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Kamal and Rajini Condole Death of Filmmaker Dasari Narayana Rao

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

My sympathy and condolences to the family of Daasari NaryaNa rao.His loss is truly a big loss for Telugu cinema. Late K.B. sir admired him

I remember the days spent with Narayan rao gaaru and Mr. Sanjeev kumar ji. Yaadgaar. He was a great fan of Mr.KB. I belong to a great family

Rajinikanth‏Verified account @superstarrajini

#RIP #DasariNarayanaRao ji

dasari narayana rao RIP

‘புத்தர் கதையில் கமலை இயக்கியிருந்தால்…’ – மிஷ்கின் ஓபன் டாக்

‘புத்தர் கதையில் கமலை இயக்கியிருந்தால்…’ – மிஷ்கின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassanதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துக்கு சொந்தக்காரர்கள் கமல், மிஷ்கின் உள்ளிட்டோர் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் அப்படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் மிஷ்கின் தன் சமீபத்திய பேட்டியில் அது குறித்து கூறியுள்ளார். அதில்…

“ஒரு படத்தில் கமலும் நானும் இணையும் சூழல் வந்தது. புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை.

உண்மையான கதையில் என்னுடைய சில கற்பனைகளையும் சேர்த்திருந்தேன். புத்தரின் பல் எப்படி இலங்கை வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

பாடலிபுத்ராவிலிருந்து புத்தரின் மகளே அவரது பல்லை எடுத்துக் கொண்டு பயணம் செய்தார். கிழக்குப் பகுதியில் ஒரு துறைமுகத்தை அடைகிறார். அங்கிருந்து ஒரு கப்பலில் 14 நாட்கள் பயணம் செய்து இலங்கையை அடைகிறார். இதுதான் நிஜக்கதை.

எனது கதையில், அந்த பல் இலங்கை போகும் வழியில் அதை திருட பலர் முயற்சிக்கின்றனர்.

இதில் கமல்ஹாசன் ஒரு கொள்ளைக்காரன் கேரக்டரில் நடிக்கவிருந்தார்.

அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக, அந்த பல்லை எடுத்துச் செல்ல பணிக்கப்படுகிறார்.

உண்மை, நேர்மை, ஒழுக்கம் என எதைப்பற்றியும் தெரியாத ஒரு கொள்ளைக்காரன் அந்தப் பயணத்தில் சேர்ந்து, பல விஷயங்களை தெரிந்துகொண்டு கடைசியில் புத்தர் வழியில் செல்வதாக கதை உருவானது.

ரூ. 70 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் நிதி கிடைக்கவில்லை.

அன்றைய சூழலில் நான் கமலை வைத்து இயக்கியிருந்தால், சொதப்பியிருப்பேன்.

ஒருவேளை இனி வரும் ஆண்டுகளில் கமல்ஹாசனே அந்த கதையை இயக்கி நடிக்கலாம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

If I direct Kamal in Buddha script i might have spoiled says Mysskin

ரஜினிக்கு பேரனாக நடிக்கும் அதிர்ஷ்டசாலி இவர்தான்

ரஜினிக்கு பேரனாக நடிக்கும் அதிர்ஷ்டசாலி இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini stillsபா ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

தனுஷ் தயாரிக்கும் இதன் சூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் சூட்டிங் ஸ்டில்கள் இணையத்தை கலக்கி வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ரஜினியின் பேரனாக மான்யூ என்ற ஒரு பையன் நடிக்கிறார்.

இந்த பையன் பிரபல டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்யூ நடிக்கும் முதல் படம் இதுதானாம்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்.

அப்போ இந்த குழந்தை அதிர்ஷ்டசாலிதானே…

Manyu son of Dance Master kadhal kandhas to play Rajini grandson in Kaala

rajini grand son kaala movie

பிரபல தயாரிப்பாளர் தசரி நாராயண ராவ் மரணம்

பிரபல தயாரிப்பாளர் தசரி நாராயண ராவ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran Telugu filmmaker Dasari Narayana Rao dies at 75பிரபல தெலுங்கு தயாரிப்பாளராரும் டைரக்டருமான தசரி நாராயண ராவ் அவர்கள் சற்றுமுன் மரணமடைந்தார்.

இவர் ஆந்திராவில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தெலுங்கில் 140 படங்களை இயக்கியுள்ள இவர், தமிழ் மற்றும் இந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.

50 படங்களை தயாரித்து இருக்கிறார்.

மேலும் நடனம், கதாசிரியர் ஆகிய துறைகளிலும் இவர் பணி புரிந்துள்ளார்.

டிவி சீரியல்களையும் இவர் தயாரித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படத்தை தயாரிக்க இருந்தார் இவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சற்றுமுன் மரணமடைந்தார்.

இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Veteran Telugu filmmaker Dasari Narayana Rao dies at 75

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் இயக்குனர் சொல்வது என்ன..?

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் இயக்குனர் சொல்வது என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Movie based on Swathi murder caseதமிழகத்தை கலக்கும் ஒரு சில சம்பவங்கள் செய்திகளாக மட்டுமே முடிந்துவிடும்.

ஆனால் ஒரு சில உண்மைச் சம்பவங்கள் மட்டுமே படங்களாக வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் முக்கியமானது சுவாதி கொலை.

தற்போது இதுவும் ஒரு படமாக வளர்ந்துள்ளது.

‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன், தான் இயக்கிய அடுத்த படத்திற்கு சுவாதி கொலை வழக்கு என பெயரிட்டுள்ளார்.

இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படம் பற்றி கதையாசிரியர் ரவி கூறியதாவது…

“இந்தப் படத்தை ரியலா பண்றதா, இல்லை கற்பனையுடன் வேறு கதையா பண்றதானுதான் முதல்ல யோசிச்சோம்.

சுவாதி கொலை செய்யப்பட்டு, ராம்குமார் கைதாகி, இறுதியில் ராம்குமார் மின் ஒயர் கடித்து இறந்து போனதாக இறுதி தகவல் வெளியானது.

நாங்களும் கிட்டதட்ட போலீஸ் மாதிரியே விசாரணை நடத்தினோம்.

இந்த கொலை வழக்கில் ஜாதி, மதம்னு இரண்டு பெரிய சக்தி தலையிட்டிருக்கு. ஒரு மாத தேடலுக்குப் பிறகு சுவாதி கொலை வழக்கில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடையா இந்தப் படத்தைச் சொல்லியிருக்கோம்”. என்றார் ரவி.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

ஒரு சர்ச்சையையும் உருவாக்க வேண்டும்ம்னு இந்த படத்த எடுக்கல.

ஒரு சமூகத்துக்கு இந்தப் படம் மூலமா ஒரு விஷயம் சொல்லனும்.

இன்னொரு சுவாதியும், இன்னொரு ராம்குமாரும் இறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்”. என்றார் இயக்குநர் ரமேஷ் செல்வன்.

Movie based on Swathi murder case

நிஜ சுவாதி-ராம்குமார் போட்டோ இதுதான்…

swathi murder case ram kumar

கபாலி-புலிமுருகன்-வேதாளம் வரிசையில் சிம்புவின் ‘AAA’ படம்

கபாலி-புலிமுருகன்-வேதாளம் வரிசையில் சிம்புவின் ‘AAA’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus AAA movie trade news updatesமோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘புலிமுருகன்’.

இதன் தமிழ் டப்பிங் 3டி படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி வெளியாகிறது.

இதன் தமிழக விநியோக உரிமையை ‘செந்தூர் சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் திருச்சி ஏரியா விநியோக உரிமையையும் இதே நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸும், மதுரை ஏரியா விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸும் கைபற்றியுள்ளதாம்.

ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்களின் விநியோக உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றி இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Simbus AAA movie trade news updates

More Articles
Follows