தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தலைவன் இருக்கின்றான் என்ற நேரலை நிகழ்ச்சிக்காக (வீடியோவில்) கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளதை அறிவித்தனர்.
இதற்கான பாடலை எழுதி, ஆல்பத்தை கமல் இயக்க உள்ளார். ரஹ்மான் இசை அமைத்து பாடுகிறார்.
இதுகுறித்து கமல் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த யோசனையை ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். அவரும் செய்யலாம் என்றார்.
படைப்பாளிளை வலிந்து வேலை வாங்க முடியாது. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றார்.
ரஹ்மான் கூறும்போது… அப்படி ஒரு ஆசை எனக்கும் இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். கமலும் ஊக்கப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது எல்லாம் தானாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
Kamal and AR Rahman rejoin for Thamizh Thai Vaazhuthu Album