’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parameshwarவிஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சாதனை பயணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய
நட்சத்திரமாக உதயமாகிறார் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தையும்
தயாரிக்கும் பரமேஸ்வரர், ‘காதல் டாட்காம்’, ‘த்ரி ரோசஸ்’, ‘மேடை’, ‘பீஸ்மர்’ உள்ளிட்ட சுமார் 15 க்கும்
மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர், சினிமாவில் பல
பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது ‘சாதனை பயணம்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக
அறிமுகமாகிறார். இவருடன் அழகு, எஸ்.கே.எம்.பாண்டியன், தமிழடியான், முகேஷ், லிபாலி பரமேஸ்காந்த்,
கருப்பு ராஜா, சக்திவேல், வாண்யா, ஜெய்கோபி, குமார், சங்கீதா, ஹரிப்பிரியா, விகாசினி உள்ளிட்ட பலர்
நடிக்கிறார்கள்.

இசையரசர் தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராஜ் எடிட்டிங்
செய்ய, அக்‌ஷய் ஆனந்த், கூல் ஜெயந்த், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். கவிஞர் முத்துலிங்கம்,
முனைவர் சி.வீரமணி, சொ.சிவக்குமார், கலை வேந்தன், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சாய்
மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சின்னமணி கவனிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாதேஷ்வரா, படம் குறித்து கூறுகையில், ”மனிதர்களின்
வாழ்க்கையே ஒரு சாதனை பயணம் தான். அந்த வகையில், சாதாரண விவசாயி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை சமாளித்து தனது வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், என்பது தான் படத்தின் கதை. இதில்,
பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர்களை கைவிட்டு விடுவது பற்றியும், பேசியிருக்கிறோம். வானத்தை போல, சேது
போன்ற படங்களின் வரிசையில் உணர்வுப்பூர்வமான படமாக சாதனை பயணம் உருவாகியுள்ளது.

இப்படத்தை பார்க்கும் பிள்ளைகள் தங்களது பெற்றோர்கள் மீது அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுவார்கள்
என்பது உறுதி.” என்றார்.

ஹீரோ பரமேஸ்வரருக்கு ஹீரோவாக இது தான் முதல் படம் என்றாலும், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில்
ஒரிஜினலாக நடித்திருக்கிறார். மெத்தை, ரோப் என்று எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்,
சண்டைக்காட்சிகளில் இவர் நடித்ததை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவும் பாராட்டு தெரிவித்தது. அப்படி ஒரு
சண்டைக்காட்சியில் முழுக்க முழுக்க தண்ணீரில் இருந்தபடியே சண்டை போடும் போது, அவரது கைவிரல் உடைத்து
போனாலும், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பரமேஸ்வரர் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

இப்படத்திற்காக தஷி இசையமைத்திருக்கும் 6 பாடல்களும் மிக சிறப்பாக வந்திருப்பதோடு, பின்னணி இசையும்
படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் உருவாகி வருகிறதாம். படத்தின் காட்சிகளையும், ஹீரோவின்
பர்பாமன்ஸையும் பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, ‘கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை பரமேஸ்வரரருக்கு
வழங்கி கெளரவித்துள்ளார்.

தற்போது டாக்கி போஷன்களை முடித்துவிட்டு பாடல்களை படமாக்க தயராகியுள்ள ‘சாதனை பயணம்’
படக்குழுவினர் படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gaurav narayananஇஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த “இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்” நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய “தூங்கா நகரம்” திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panni kuttyஅனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.

நடிகர்கள்:
கருணாகரன் ,
யோகிபாபு ,
சிங்கம் புலி ,
திண்டுக்கல் லியோனி ,
T.P கஜேந்திரன் ,
லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் ,
‘பழைய ஜோக்’ தங்கதுரை

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – அனுசரண் முருகையன்
கதை – ரவி முருகையன்
திரைக்கதை – M .மணிகண்டன் , அனுசரண், ரவி முருகையா
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இசை – கிருஷ்ணகுமார் ( K )
ஒளிப்பதிவு- N .சதிஷ் முருகன்
படத்தொகுப்பு- M .அனுசரண்
சண்டை பயிற்சி – ‘ FIRE ‘ கார்த்திக்
தயாரிப்பு மேலாளர் – M .சிவகுமார்
ஒப்பனை-P S.சந்திரசேகர்
கிரியேட்டிவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் – சமீர் பரத் ராம் ( SUPER TALKIES ),M.மணிகண்டன் ( TRIBAL ARTS)
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது

நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith‘விஸ்வாசத்தைத் தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இது, இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னையில் அஜித் ரசிகர்களின் அன்பு தொல்லையால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.

கோர்ட் சம்பந்தப்பட்டக் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு நீண்ண்ட டயலாக் ஒன்றை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டாராம் அஜித்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் நயன்தாரா & கீர்த்தி சுரேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் நயன்தாரா & கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 166பேட்ட படத்தை முடித்த ரஜினிகாந்தும் சர்கார் படத்தை முடித்த டைரக்டர் முருகதாசும் முதன் முறையாக புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இது ரஜினிகாந்த் நடிப்பில் 166வது படமாக உருவாகவுள்ளது.

அடுத்த மார்ச் மாதம் இறுதியில் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகிகளாக நயன்தாரா & கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் ரஜினிக்கு இரண்டு வேடமா? என்ற முழு விவரங்கள் தெரியவில்லை.

ரஜினியுடன் நயன்தாரா சில படங்களில் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷ் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்; மீட்க வலியுறுத்தும் சூர்யா-கார்த்தி & சித்தார்த் – பார்த்திபன்

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்; மீட்க வலியுறுத்தும் சூர்யா-கார்த்தி & சித்தார்த் – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhinandhanகடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பாக். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாக். எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.

இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிநந்தனை பத்திரமாக இந்திய அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பலரும் தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் சூர்யா..

“விங்க் கமாண்டர், எனது சகோதரர் அபினந்தன் வர்தமானுக்கு என் வணக்கங்கள். மிகவும் பெருமையாக உள்ளது. உறுதியுடன் இருங்கள்.

மொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் பத்திரமாக திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்”

நடிகர் கார்த்தி…

“இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில விமான படை ஃபைட்டர் பைலட்டுகளை என் வாழ்வில் சந்தித்தது எனது அதிர்ஷ்டம். அவர்களைத் தெரிந்து கொண்டது உண்மையில் ஒரு பெருமை.

அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன்.

நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும் தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

நடிகர் & இயக்குனர் பார்த்திபன்..

“கணவனின் கடமையும் தந்தையின் வீரமும், மனைவியின் மனதையும் மகனின் கண்களையும், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் எத்தனை நிமிடங்கள் காக்கும்? அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத்திருமகனை?”

நடிகர் சித்தார்த்…

“தீவிரவாதிகள் நமது வீரர்களைக் கொன்றார்கள். நாம் அவர்களின் முகாம்களை அழித்தோம் (யாரும் பலியாகவில்லை என அவர்கள் மறுத்தாலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை).

நமது பைலைட்டை சிறைபிடித்திருக்கிறார்கள். இது ஒரே அடிப்படையில் நடைபெற்ற சம்பவமே அல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது.

இந்தியா ஆதரிக்கவில்லை. போர் இதை மாற்றாது, மாற்றவும் முடியாது. பேச்சுவார்த்தையும் தான்”

More Articles
Follows