கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கிய பிரபல நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கபாலி’ தரிசனம் தர தயாராகிவிட்டார்.

இன்னும் சில நாட்களில் இந்த தரிசனம் கிடைக்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தயாரிப்புக் குழுவினரும் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புரோமோஷன், விளம்பரம், விநியோகம் என பல வகைகளில் பிஸியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை AGS நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘கபாலி விளம்பரம் போதும்…’ ரஞ்சித் வேண்டுகோள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள கபாலி விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் விளம்பரங்களும் இந்திய சினிமாவே வியக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.

எனவே, கபாலி மூலமாக தங்கள் பொருட்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள பல நிறுவனங்கள் முட்டி மோதி வருகின்றன.

இந்நிலையில், ‘கபாலி’யோடு தங்கள் விளம்பரத்தை செய்து வரும் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது…

“கபாலி படத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் போது படத்தை வெளியிட்டு விட வேண்டும்.

மேலும் விளம்பரங்கள் வேண்டாம். மக்கள் படம் பார்க்க காத்திருக்கின்றனர். இதுவே போதும் என நினைக்கிறேன்” என்றார்.

கமலுக்கு பதிலாக இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்கா படத்தை தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவன புடி.

இதில் சுதீப் மற்றும் நித்யா மேனன் இருவரும் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், முகேஷ் திவாரி, சரத் லோகித்ஸ்வா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை இமான்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை ஜீலை 20ஆம் தேதி கமல் வெளியிட இருந்தார்.

ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இணைந்து இசையை வெளியிடவுள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு அதிக படங்களில் நடித்து வருபவர் பிரம்மானந்தம்.

தெலுங்கு தவிர தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் கில்லி, மொழி, பயணம், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 1000 படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் 1000 படங்களில் நடித்துள்ளதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சிவிலியன் போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலிக்கு லீவு விட்ட சென்னை நிறுவனம்… ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளன.

ஆன்லைன் புக்கிங் தொடங்கவுள்ள நிலையில், சில தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் என்ற நிலையும் தொடர்கிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என பல மீம்ஸ்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸ் அன்று தங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.

சென்னை OMR சாலையில் உள்ள ஃபின்டஸ் நிறுவனம்தான் இந்த புதுமையை கையாண்டுள்ளது.

இவையில்லாமல் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் ஒரு காட்சிக்கு தங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

இதனால் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.

நடந்து வந்து நன்றி சொல்வேன்… ரசிகர்களுக்கு கமல் தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 13ஆம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்த கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது ஓய்வு எடுத்து வரும் தன் உடல்நிலை பற்றி ரசிகர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது…

என்பால் எப்போதும் என் நிலையிலும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல.

எனக்கு சிறு விபத்தோ, ஆபத்தோ ஏற்பட்டால் கூட கேள்விகள் பலவற்றுடன் வீறுகொண்டு எழுந்து என்னை காக்க எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதென்று நான் என்ன செய்ய.

இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை.

பதிலுக்கு அன்பும், என் கலையும், அதை செய்ய நான் ஏற்ற பல பாத்திரங்களும் தான்.

எனக்கு நடக்கும் நல்லதோ, கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் எனக்கு விசித்திரமல்ல.

சில இடர்களை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று.

ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில், இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான்.

ஆனால் நல்ல மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் இருக்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன்.

எப்படி இருக்கீங்க? எப்ப பார்க்கலாம்? என்று கேள்விகளை கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows