கர்நாடாகாவில் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு; காலா ரிலீஸ் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த மார்ச் 2018ல் ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த திரையுலகினரும் ஆதரவு கொடுத்துள்ளதால் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய காலா திரைப்படம் அறிவித்தப்படி ஏப்ரல் 27ல் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுபட்டு நடப்போம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாளு நாகராஜ் என்பவர் தலைமையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் காலா படத்தை கர்நாடாகவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.

இதனால் காவிரி பிரச்சினையால் காலா ரீலீஸ் மேலும் சிக்கல்கள் உருவாகும் எனத் தெரிகிறது.

இதுவரை உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அறம் 2 படத்திற்காக ஜாதி-மத கொடுமைகளை பேசும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட்டான படம் ‘அறம்’.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை.

இந்த கதையும் இதன் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தார் கோபி நயினார்.

இதன் படப்பிடிப்பு வருகிற 2018 செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இதில் மத ரீதியிலான வன்முறைகள், சாதிய கொடுமைகளை எதிர்த்து நயன்தாரா போராடுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

நயன்தாரா தற்போது பிஸியாகவுள்ளதால் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Gopi Nayinar gearing up to make Aramm sequel

சதீஷ்-சூரி இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் இணையும் மற்றொரு காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆருக்கு நாகேஷ், சத்யராஜீக்கு கவுண்டமணி என்பதுபோல ஒவ்வொரு ஹீரோவுக்கும் சில காமெடியன்களோடு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

இன்றைய தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு சூரி மற்றும் சதீஷ் உடன் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களில் இவர்கள் இருவரும் மாறி மாறி ஜோடி சேர்ந்து காமெடி செய்து வந்தனர்.

தற்போது உருவாகியுள்ள சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணைந்துள்ளார்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரின் இன்று நேற்று நாளை படத்தில் கருணாகரன் காமெடியில் கலக்கியிருந்தார்.

எனவே அவரைத்தான் சிவகார்த்திகேயனுடன் காமெடி செய்ய வைக்கவுள்ளாராம்.

ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த்தின் காலா பட சென்சார் சர்ட்டிபிகேட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் ஏப்ரல் 27ல் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக எந்த ஒரு புதுப்படங்களையும் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.

இந்நிலையில் ஒரு படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும்.

அதன் பின்னரே படம் சென்சாருக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் காலா படத்திற்கு கிளியரன்ஸ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்து வந்தது.

அதன்பின்னர் ரஜினி, விஷால் சந்திப்பின் போது இந்த விவகாரம் பேசப்பட, காலா படத்தை சென்சாருக்கு அனுப்ப தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி கடிதம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து காலா சென்சாருக்கு சென்றுள்ளது.

படத்தில் உள்ள சில வசனங்களுக்கு மியூட், 7 காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்சார் அதிகாரிகளிடம் பட இயக்குனர் ரஞ்சித் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது மீண்டும் படத்தை மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Super Star Rajinis Kaala movie Recensor updates

தளபதி நடிகர் விஜய்யின் தங்கைக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுபோல் விஜய்யும் அண்ணா என்பதை மிக ஸ்டைலாக சுறுபவர்தான்.

இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

தன் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Thuppakki fame Actress Sanjana Sarathi marriage updates

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்களை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்ராஜ்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடந்து வருவதால், அது முடிவடைந்து காலா படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இப்படத்திற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி.

இப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படம் குறித்த அறிவிப்பு முன்பே வந்தாலும், சூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.

இப்படத்தில் தனுஷ் உடன் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, டினேரோ ஆகிய நடிகர்கள் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Karthik Subbaraj will direct Hollywood Actors in Dhanush movie

More Articles
Follows