தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை ஏப்ரல் 27-ல் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டு இருந்தனர்.
இதனிடையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் இருக்கும் என்ற கூறப்படுகிறது.
இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை.
இருந்தபோதிலும் போராட்டம் முடிந்த பிறகு, சென்சார் செய்யப்பட்ட படங்களை தேதி வாரியாக வரிசைப்படுத்த உள்ளனர்.
அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாம்.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்க வேண்டிய தடையில்லா சான்றையும் ‘காலா’ படக்குழு இதுவரை பெறவில்லை என கூறப்படுகிறது.
வேலைநிறுத்தத்தால், சான்றைப் பெற்று படத்தை தணிக்கைக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, காலா திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இவை தவிர பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவை 300 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
அத்துடன் சிறிய படங்களை வெளியிட வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கையாம்.
இதனால் காலாவுக்கு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kaala release may postponed also screens count may reduced