கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

கபாலி தயாரிப்பாளருடன் சூர்யா; ‘தெறி’க்க விடுவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaakha Kaakha suryaஒரு சிலர் கூட்டணியில் வெளியாகும் படங்கள் என்றால், அதன் மீதான எதிர்பார்ப்பே தனிதான்.

கடந்த 2003ஆம் ஆண்டில் அப்படி அமைந்த கூட்டணிதான் காக்க காக்க திரைப்படம்.

எனவே மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து, இதன் இரண்டாம் பாகம் வெளி வராதா? என ரசிகர்கள் ஏங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில், கபாலி தயாரிப்பாளர் எஸ்.தாணு, இந்த பாகத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாகவும், இதற்கான பணியை கௌதம் மேனன் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பபடுகிறது.

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ள கேரக்டர் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush photosராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

மேலும் இப்படத்தை தனுஷே தயாரிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் எனத் தெரிய வந்துள்ளது.

விஜய்சேதுபதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

விஜய்சேதுபதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijaysethupathi and keerthy sureshவிஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யுடன் நடிக்கும் பைரவா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே, இதனை தொடர்ந்து, இவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இதனிடையில் அல்லு அர்ஜீன் நடிக்கவுள்ள தமிழ் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

கால்ஷீட் பிஸியாக இருப்பதால் விரைவில் முடிவை தெரிவிப்பாராம் கீர்த்தி.

‘அஸ்வின் தாத்தா’ சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆதிக் ரவிச்சந்திரன்

‘அஸ்வின் தாத்தா’ சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu adhik ravichandranசிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார்.

மதுரை மைக்கேல் என்ற முதல் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பாப்புலர் ஆனது.

இந்நிலையில் 2வது கேரக்டரில் 60 வயது முதியவராக நடித்திருக்கிறாராம் சிம்பு. இக்கேரக்டருக்கு அஸ்வின் தாத்தா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுபற்றி ஆதிக் ரவி தன் ட்விட்டரில் கூறியிள்ளதாவது…

“முதன்முறையாக இந்த 60 வயது கேரக்டரை சிம்பு தன் கேரியரில் செய்கிறார். இந்த கேரக்டருக்கான தன் உடல் எடையை அதிகம் ஏற்றியிருக்கிறார்.

இதற்காக அவர் பட்ட வலிகளை நான் அறிவேன். நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ரஜினி பிரார்த்தனை

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ரஜினி பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, அவர் நலம் பெற வேண்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முக ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

திரையுலக சேர்ந்த விஷால், லிங்குசாமி உள்ளிட்டவர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தும், தமிழக முதல்வர் நலம் பெற வேண்டி, தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்?

‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay photosபரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் பைரவா.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் நட்சத்திர கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா, பாப்ரிகோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அண்மை காலமாக விஜய் தன் படங்களில் பாடல்களை பாடி வருகிறார்.

எனவே, இப்படத்திலும் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.

விரைவில் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதையானது கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது.

More Articles
Follows