க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் ராஜேஷ்

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KJR Studios நிறுவனம் சார்பாக KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான படம் க/பெ ரணசிங்கம்.

அரியாநாச்சி என் பெண் கேரக்டரில் வாழ்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஜிப்ரான் இசையமைக்க விருமாண்டி என்பவர் இந்த படத்தை மண் மாறாமல் இயக்கியிருந்தார்.

வசனங்களின் ஊடே இன்றைய சில அரசியல் நிலவரங்களையும் அழுத்தமாக சொல்லியிருந்தார் டைரக்டர்.

ஆன்லைனில் வெளியான இந்த திரைப்படம் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது.

விமர்சகர்களும் நல்ல மதிப்பெண் கொடுத்தனர். நம் filmistreet சார்பாக 3.5/5 மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

படத்தின் வெற்றி மற்றும் படக்குழுவின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் இயக்குனர் பெ.விருமாண்டிக்கு Maruti XL car ஐ பரிசாக அளித்துள்ளார்.

Ka Pae Ranasingam producer gifted a new car to director

ka pae ranasingam

IMG_20201104_190317

சுதா கொங்கரா மகள் திருமண விழா..; சூப்பர் கெட் அப்பில் வந்து சூர்யா வாழ்த்து.!

சுதா கொங்கரா மகள் திருமண விழா..; சூப்பர் கெட் அப்பில் வந்து சூர்யா வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

இந்த திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் சுதா கொங்கராவின் மகள் உத்ராவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்ம திருமண விழாவிற்கு சூப்பரான கெட் அப்பில் வந்து நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூ கெட் அப்பில் அசத்தலாக வந்திருந்தார்.

மேலும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Actor Surya flaunts his new look at Sudha Kongara’s daughter’s wedding

suriya

suriya at sudha kongara daughter wedding

2020-11-05

BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay in politicsநடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறாராம்.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது.

இந்த தகவல் குறித்து அவரது PRO தரப்பில் விசாரித்த போது விஜய் பற்றிய செய்தி தவறானது என விளக்கமளித்துள்ளார்.

விஜய் மௌனம் கலைப்பாரா?

The news spreading about Thalapathy Vijay political party registered today is untrue

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு காரணமான சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூதாட்ட விளம்பரத்தில் பிரபலங்கள் நடிப்பதால் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் . விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்…

பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி விளம்பரம் செய்கின்றனர்.

பொது மக்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Madras High Court issues notice to Virat Kohli, Ganguly and Tamannah in PIL against online games

kohli ganguly tamannah

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலாபால்.

ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆனது.

தற்போது 2வது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் விஜய்.

ஆனால் அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை அமலாபால் 2வதாக திருமணம் செய்துள்ளதாக போட்டோஸ் வெளியானது.

அந்தப் படங்களை பவ்னிந்தர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டார்.

ஆனால் அப்போது அமைதியாக இருந்தார் அமலாபால்.

தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அமலா.

அதில், ‘எக்ஸ் பாய் ப்ரெண்ட் பவ்னிந்தர் சிங், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு சில படங்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என அமலாபால் கேட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவே பவ்னிந்தர் சிங்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதியளித்துள்ளார்.

Amala Paul to file case against her ex boy friend

Amala-Paul-wedding-photos-3

‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan balaji murugadossவிஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 4’ கடந்த ஒரு மாதமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது அனல் பறக்கும் வாய்ச்சண்டைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

ஒரு நாள் நடிகை சனம் ஷெட்டியை பாலா, ‘தருதலை’ என கேலி செய்தார்.

இதனையடுத்து கோர்ட் செட்டப் ஒரு டிசைன் செய்து பாலா, சனம் இருவரது சண்டை பற்றியும் இரு அணிகளாக விவாதம் நடைபெற்றது.

இறுதியாக பாலாவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுசித்ரா.

இவையில்லாமல் சனம் பற்றி பாலா பேசும்போது ‘அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் போட்டியில் வென்றார்,’ எனவும் ஒரு முறை கூறியிருந்தார்.

ஆனால் கடந்த வருட பிக்பாஸ் சீசனில் பெண் அவமதிப்பு பற்றிய சர்ச்சை உருவானது.

எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை நடிகர் சரவணன் சொன்னதை அடுத்து அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள்.

ஆனால், இந்த சீசனில் பாலா எதை செய்தாலும் பிக்பாஸ் அவரை கண்டு கொள்வதில்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து வருகிறார் பாலாஜி.

ஆரிக்கு அட்வைஸ் ஆரி, சனம்க்கு முந்திரிக்கொட்டை, வேல்முருகன்க்கு டிப்ளமேட்டிக், சோம்க்கு பப்பட் என ஒவ்வொருவருக்கும் பெயர் வைத்துள்ளார் பாலாஜி.

ஆனால் அவரை குழந்தை என அழைத்தால் மட்டும் ஏன் கோபப்படுகிறார்?

இதுபோல பல்வேறு கண்டனங்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Did Balaji Murugadoss cross his limits ?

More Articles
Follows